இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து: பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து:  பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

லாரி மோதி விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8:30 மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். இந்த நிலையில் உக்கடம் லாரி அசோசியேசன் பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டு இருந்த போது, லாரிப் பேட்டைக்கு வந்த டிப்பர் லாரி ஆசிரியை அனிதா வந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆசிரியை தூக்கி வீசப்பட்டு சாலையின் நடுவே அவர் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை அனிதா உயிரிழந்தார்.

இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் உக்கடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலை நேரம் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், உடனடியாக அங்கு இருந்து டிப்பர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை காவல் துறையினர் சரி செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story