வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

Namakkal news- வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் (மாதிரி படம்)

Namakkal news- வளையப்பட்டி பகுதியில் வரும் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல், வளையப்பட்டி பகுதியில் வரும் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு மாதமும், துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் வளையப்பட்டி, மேட்டுப்பட்டி, புதுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், அரூர் மேடு, மேலும் வயைப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story