வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Coimbatore News- கோவை குற்றாலம் ( கோப்பு படம்)

Coimbatore News- வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Coimbatore News, Coimbatore News Today- கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று சிங்கோனா, சின்னக்கல்லார், சோலையாறு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது. அதேபோல வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 19.8 செ.மீ. மழையும், சிங்கோனா பகுதியில் 14.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல கடந்த 20 ம் தேதியும் கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சிறுவாணி அடிவார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சிறுவாணி அடிவார பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் அருவிகளுக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Tags

Next Story