ஆதிரைதான் மணப்பெண்ணா? சித்தியால் கடுப்பாகும் பிரபு!

ஆதிரைதான் மணப்பெண்ணா? சித்தியால் கடுப்பாகும் பிரபு!
மருமகள் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மருமகள் சீரியல் புரோமோ | Marumagal serial today promo



மருமகள் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணைய மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial written update

விரைவில் அப்டேட் செய்யப்படும்

மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial update today

விரைவில் அப்டேட் செய்யப்படும்

மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial today episode

விரைவில் அப்டேட் செய்யப்படும்

மருமகள் சென்ற வார எபிசோட் | Marumagal serial Last Week episode

அய்யய்யோ எம காதகன் வந்துட்டான் போலயே என பாட்டி பரிதவிக்கிறாள். அந்த நேரத்தில் வெளியே பிரபு வந்து நிற்கிறான். அவனுக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. உள்ளே வரும் பாட்டி, அவன் வந்துவிட்டான் என சொல்லி பயமுறுத்துகிறாள். நீ டிவிய உள்ள கொண்டு போயி வை என்கிறார் அப்பா.

டிவிய நான் துடைக்குறப்ப கை தவறுதலா பட்டு உடஞ்சிட்டு என சொல்கிறார் அப்பா. தம்பியோ தான் தள்ளிவிட்டதா சொல்கிறேன் என்று சொல்கிறான். இப்படி அப்பா, மகன், மகள் ஆகியோருக்குள் விவாதம் நடக்கிறது. கடைசியாக அப்பா தன் தலையில் பொறுப்பை ஏற்கிறாள்.

ரோகினி அழுகிறாள். பிரபுவும் கால் பேசி முடித்துவிட்டு உள்ளே வருகிறான். ஆனால் எல்லாருடைய முகத்திலும் ஏதோ ஒரு பதற்றம் இருப்பதை கண்டு அங்கேயே நிற்கிறான். ஏதோ பிரச்னை என்பதை கண்டுபிடித்துவிட்டான். இப்படி எல்லாரும் ஒன்னா பம்மிட்டு இருந்தீங்கன்னா எனக்கு எதோ செலவு இழுத்துவிடப் போறீங்கன்னு அர்த்தம் என சொல்லிவிட்டு யார் என்ன செலவ இழுத்துவிட்டீங்க சொல்லுங்க என கத்துகிறான் பிரபு.

அப்பா தான் துடைக்கும்போது டிவியை உடைத்துவிட்டதாக தெரிவிக்கிறார். இதையே தயங்கி தயங்கிதான் சொல்கிறார். இது தெரிந்ததும் பிரபு அதிர்ச்சியடைகிறான். கோபப்படுகிறான்.வேகமாக உள்ளே சென்று டிவியை பார்க்கிறான். அது உடைந்து கீழே விழ, கோபத்தில் மீண்டும் எரிச்சலடைகிறான்.

அப்பாவை முறைத்து பார்த்துக்கொண்டே, எரிச்சலில் கத்துகிறான். என் மேல் இருக்கும் கோபத்தை டிவி மேல காட்டுறீங்களா என்று சொல்கிறான். பெத்த புள்ள மேல அவ்ளோ வன்மம் உங்களுக்கு. அப்பா நிலைமையை சமாளிக்க நினைக்கையில், பிரபு கோபத்தில் கத்த ஆரம்பிக்கிறான். ஒரு வேலையை உருப்படியா செய்ய வக்கில்லைனா அத ஏன் செய்றீங்க என திட்டிக்கொண்டிருக்கிறான்.

அப்போது தம்பிக்கும் அண்ணனுக்கும் இடையில் சண்டை ஏற்படப்போகிறது. பண்றதெல்லாம் பண்ணிட்டு மன்னிப்பு வேற கேட்கிற என கோபப்படுகிறான். இந்த கோபத்தை தங்கை மீது காட்ட, இருவரும் முட்டி மோதிக்கொள்ள நினைக்கிறார்கள். அதனை அப்பாவும் அப்பத்தாவும் தடுக்கிறார்கள்.

டிவியை உடைத்துவிட்டாயே அந்த டிவியை வாங்கிக்கொடுடா என சவால் விடுகிறான். அதற்கு அப்பா தம்பியால் எப்படி இதை வாங்கித் தர முடியும் என்ற சொல்ல, பிரபு எங்கேயோ போகட்டும் என்னவோ பண்ணட்டும். போயி பிச்ச எடுறா என பிரபு சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

உனக்கு டிவி தான முக்கியம் எனக்கு ஒரு வாரம் டைம் குடு. நான் டிவியோ வரேன் என்று சொல்லிவிட்டு கோபத்தில் செல்கிறான். பிரபுவும் கோபத்தில் உள்ளே ரூமுக்கு செல்கிறான். பாட்டியும் தன் மகனிடம் அந்த பெண் குறித்து சீக்கிரம் விசாரிக்கும்படி கேட்கிறார். ரோகினி இதனை நினைத்து அழுகிறாள். என்னால் தான் சின்ன அண்ணனுக்கு இப்படி ஆகிடிச்சி. இனி அவன் என்ன பண்ணுவான் என வருத்தப்படுகிறாள்.

ஆதிரை தன் அப்பா அலுவலகத்துக்கு செல்கிறாள். ஆதார்கார்டு, பான் கார்டு உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளில் முகவரி மாற்றம் செய்ய அரசு அலுவலகத்துக்கு செல்கிறாள். தான் செல்வதாக அப்பா சொல்ல, அதற்கு ஆதிரை தான் செல்வதாக சொல்கிறாள். இருவரும் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இருக்கும் கஷ்டத்தைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள்.

நமக்குலாம் சொந்த வீடுங்குற கனவு நனைவாகனும் ன்றது அவ்ளோ ஈஸி இல்ல. அடுத்த ஜென்மத்துலயாச்சும் நாம பணக்கார வீட்டுல பிறக்கணும். தூக்கனாங்குருவியாச்சும் பிறக்கணும். அந்த சுதந்திரம் நமக்கு கிடைக்கல. ஏழைகளா இருக்குறது நம்ம தப்பா என்று கேட்கிறார். அந்த நேரத்தில் ஆதிரையின் கல்யாணத்தை பற்றி பேசுகிறார் அப்பா.

அந்த நேரத்தில் ஆதிரைக்கு ஃபோன் வருகிறது. அந்த நேரத்தில் மணி அடித்ததால், இது நல்ல சகுணம் என்கிறார் அப்பா. அந்த பக்கம் பிரபுவின் தங்கை ரோகினி பேசுகிறாள். ஃபோனில் வாட்டர் கேன் கேட்கிறாள் ரோகினி. தான் அங்கு சென்று வாட்டர் கேன் போட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார் அப்பா.

வீட்டில் அப்பத்தா, ரோகினி, பிரபுவின் தந்தை சமையல் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்பாவ திட்டிவிட்டோமேன்னு பிரபு வருத்தமடைகிறான். அப்பாவிடம் ஸாரி கேட்டுவிட்டு வர நினைத்து கிச்சனுக்கு செல்கிறான் பிரபு. அங்கு அப்பா சமையல் செய்துகொண்டிருப்பதை பார்த்து ஃபீல் பண்ணுகிறான் பிரபு.

தான் சிறுவயதில் இருக்கும்போது தன்னை ஸ்கூலுக்கு அனுப்பி வைப்பது, ஷூ மாட்டி விடுவது, நல்ல மதிப்பெண் பெற்றால் பாராட்டுவது, சைக்கிள் ஓட்ட சொல்லிக்குடுத்தது, சாப்பாடு ஊட்டிக் கொடுத்தது, தூங்க வைத்தது என அனைத்தையும் நினைத்து கண்கலங்குகிறான் பிரபு. அப்பாவிடம் சென்று மன்னிப்பு கேட்க அவனுக்கு எந்த ஈகோவும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் தம்பியும் வந்து நிற்கிறான்.

அப்பாவை அழைத்து, ஹாலுக்கு வரச் சொல்கிறான். அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். என்ன நடக்கப்போகிறதோ என வருத்தத்தில் இருக்கிறார்கள். பாட்டியும் அப்பாவை நிறைய திட்டிவிட்டாய் பிரபு இனி அவன திட்டாத. பிரபுவும் நான் திட்ட வரவில்லை. அப்பாவிடம் செல்லும்போது தம்பி தடுக்கிறான். மீறி அப்பாவிடம் செல்லும் போது தங்கையும் அப்பாவை விட்டுவிடச் சொல்லி கேட்கிறாள். அப்பாவின் அருகே செல்லும் பிரபு, அப்பாவை நெருங்கி நிற்கிறான்.

அண்ணே சொல்றத கேளுண்ணே. அப்பாவ விட்ருண்ணே என்கிறார். ஆனால் பிரபு நேரடியாக அப்பாவிடம் சென்று மன்னிப்பு கேட்கிறான். இதனால் அந்த குடும்பத்தில் அனைவருமே அதிர்ச்சியடைகிறார்கள். ஆனந்த கண்ணீர் அனைவரது கண்களிலும் எட்டிப்பார்க்கிறது. இதே அன்போட அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பாட்டி சொல்கிறாள்.

அந்த நேரத்தில் ஆதிரையின் அப்பா தண்ணீர் கொண்டு வருகிறார். இதை பிரபுவின் சித்தி மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள். தான் போட்ட திட்டம் இப்படி பாலாய் போயிவிட்டதே என வருத்தப்படுகிறார்.

பிரபுவின் தங்கை தண்ணீர் கொண்டு வந்து போடும் ஆதிரையின் அப்பாவிடம் காசு எவ்வளவு என்று கேட்க, அவர் 30 ரூபாய் என்று சொல்ல அவர் அதிர்கிறார். ஏற்கனவே நாங்கள் 40 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்தோம் என்கிறாள் தங்கை. பிரபு தங்கையிடம் ஆதிரை குறித்தும் தண்ணீர் பிசினஸ் குறித்தும் பேசுகிறார்கள்.

உள்ளே பிரபுவின் அப்பா, இன்னொரு கேன் கேட்க, அவர் தண்ணீர் கேன் போடும் ஆதிரையின் அப்பாவை பார்க்கச் செல்கிறார். தில்லைநாதன் , சிவப்பிரகாசம் இருவரும் சேர்ந்து கொள்கிறார்கள். இருவரும் நல்ல நண்பர்கள் என்பது தற்போது தெரியவருகிறது. இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிவப்பிரகாசத்தை தில்லைநாதன் வீட்டுக்கு அழைக்கிறார். ஆனால் அவர் தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும் நான் வேறொருநாள் வந்து சந்திக்கிறேன் என்றும் கூறிவிட்டு புறப்படுகிறார் சிவப்பிரகாசம்.

அங்கே வேள்விழி இதனைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். இது ஏதோ சதித்திட்டம் போல என்று யோசிக்கிறாள். அந்த நேரத்தில் ஆதிரைக்கு தண்ணீர் ஆர்டர் வர அவள் கேனை எடுத்துக்கொண்டு செல்கிறாள். அந்த நேரத்தில் அகல்யா அங்கு வருகிறார். அப்பா கொஞ்ச நேரத்துல வந்துடுவார்னு சொல்லிட்டு கிளம்புறா ஆதிரை.

பிரபுவும் ஆதிரை இருக்கும் அதே ஏரியாவுக்கு வருகிறான். ஆதிரையின் வீட்டை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கையில், அங்கே வேறொருவர் ஆதிரையின் தம்பியிடம் விவரம் கேட்க, பொண்ணு பேரைச் சொல்லி அட்ரஸ் கேட்கிறார்கள். அவனை பிடித்து பிரபு எப்படியாவது ஆதிரையின் அட்ரஸை கண்டுபிடித்துவிடலாம் என நினைக்கிறான்.

ஆதிரையின் தம்பியிடமே ஆதிரையை பிராடு என்று சொல்லி அட்ரஸை கேட்கிறான். அந்த பொண்ணு பாக்க எப்படி இருக்கும் என கேட்க, அவள் அழகிதான் ஆனா பேரழகி இல்லை என பிரபு சொல்ல, அந்த நேரத்தில் அம்மா கூப்பிட பிரபுவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

அந்த நேரத்தில் ஆதிரை அந்த பக்கமாக வாட்டர்கேன் கொண்டு செல்கிறாள். இவன் பின்னாடியே ஃபாலோ பண்ணிக்கொண்டு போகிறான்.

மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial update today

வண்டி பெட்ரேல் இல்லாமல் நிற்க, இறங்கி தள்ளிக்கொண்டே செல்கிறாள். அந்த நேரத்தில் பிரபு அவளை ஃபாலோ செய்துகொண்டு வருவதை ஆதிரை பார்த்துவிடுகிறாள். பிரபுவும் ஏதேதோ செய்து தான் எதேச்சையாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் ஆதிரைக்கு சந்தேகம் வலுக்கிறது.

இவனை ஒரு வழி பண்ணனும் என ஆதிரை அவனிடம் சென்று என்ன நீ என் பின்னாடியே வந்துட்டு இருக்க. கனவில் வந்தது போலவே, நீ என் முன்னாடி போயிட்டு இருக்க என்று அடுக்குகிறான். ஆனால் ஆதிரையை எப்படியோ பேசி மயக்குகிறான். நா ஏன் உன் பின்னாடி பாலோ பண்ணி வரணும். எனக்கு என்ன வேண்டுதலா? என்று கேட்க, ஆதிரை வேண்டுதலா கூட இருக்கலாம் என்கிறாள் ஆதிரை. பின் ஆதிரை போலீஸுக்கு போவதாக சொல்கிறாள். பின் சமாளித்துக்கொண்டு கிளம்ப சொல்கிறான்.

ஆதிரையின் காலடி மண்ணை எடுக்க முயன்றாலும் கனவில் நடந்தது போல நடந்துவிடக்கூடாது என அவள் போயிவிட்டாளா என்பதை கன்பார்ம் செய்துகொண்டு பின் எடுக்கலாம் என திட்டமிடும்வேளையில் அவனது தம்பியும் அந்த இடத்துக்கு வந்து சேர்கிறான்.

மருமகள் சீரியல் இன்றைய எபிசோட் | Marumagal serial today episode

ஆதிரையின் காலடித் தடத்தைப் பார்த்து வைத்திருந்த பிரபுவுக்கு, அவனது தம்பி நேரடியாக வந்து அந்த காலடித்தடத்திலேயே காலை வைக்கிறான். இதனால் எரிச்சலடைந்து அவனை அங்கிருந்து விரட்டுகிறான் பிரபு. இன்னைக்கும் அவ காலடி மண்ண எடுக்க முடியாம போச்சே என வருந்துகிறான் பிரபு.

ஆதிரையின் அப்பா அங்கே பிரபு அலுவலகத்துக்கு வருகிறார். அவனது நண்பரிடம் பிரபு குறித்து கேட்க, அவர் இன்னும் வரவில்லை என்று சொல்ல, அவனும் அத்துமீறி சண்டை போட ஆரம்பிக்கிறான். பின் தப்பா எடுத்துக்காதீங்க அந்த சார் வந்ததும் வேலையை முடிச்சிட்டு கிளம்புங்க. அவர் சீக்கிரமே வந்துடுவாரு என்கிறான் நண்பன்.

Tags

Next Story