நான் நடிகர் விஜயை விமர்சித்தேன் என்று சொல்வது பொய் : எச்.ராஜா விளக்கம்

நான் நடிகர் விஜயை விமர்சித்தேன் என்று சொல்வது பொய் : எச்.ராஜா விளக்கம்

செய்தியாளர்கள் சந்திப்பில் எச்.ராஜா

நான் விஜயை விமர்சித்தேன் என்று சொல்வது பொய். அது 100 சதவீதம் பொய்.நான் விஜயை விமர்சிக்கவில்லை என எச் ராஜா கூறி உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

மாநில தலைவர் அண்ணாமலை கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தி அதன் தலைவராக தன்னை நியமித்த அகில இந்திய குழுவுக்கு நன்றி. இந்த மூன்று மாத காலங்கள் கட்சியில் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள், புதிய உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பித்தல் இயக்கமாக இருக்கப் போகிறது. குழுவில் முடிவு செய்து இருப்பது போல ஒரு பூத்திற்கு 200 பேர் சேர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிலவரத்தைப் பற்றி நான் முடிவு செய்ய முடியாது. அது அன்றாடம் மாறக்கூடிய விஷயம். பாரதிய ஜனதா கட்சியின் ஒரே குறிக்கோள் 2026 தேர்தலில் எல்லா விதத்திலும் மக்களின் ஆதரவை பெறுவதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். சரியான உறுப்பினரை சேர்க்க வேண்டும். கோயம்புத்தூர், மயிலாடுதுறை, தென் சென்னை போன்ற பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் தேர்தலுக்கு முன்பாக திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்ப்பதோடு வாக்கு செலுத்த தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரும் அவர்களுடைய வாக்குகளை செலுத்தி உள்ளார்களா என தேர்தல் ஆணையம் சரிபார்த்து வருகிறது. அதனை சேர்த்து பார்ப்பதற்கான காலகட்டம் இது. அதில் எங்களுடைய கவனம் முழுமையாக இருக்கும்.

நான் 1991 ஆம் ஆண்டு முதல் நிர்வாகியாக இருந்து வருகிறேன். அதிலும் 93 லிருந்து மாநில செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறேன். கட்சியின் மையக் குழுவில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆகவே மையக்குழுதான் முடிவு செய்யும். அதுவும் கூட்டணி விஷயங்களை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். அண்ணாமலை இருந்தபோது ஒரு முடிவு, அவர் இல்லாத போது ஒரு முடிவு என கிடையாது. மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி தருவதில்லை என்பது நொண்டிக்குதிரைக்கு சறுக்குகின்றது சாக்கு என சொல்வது போல உள்ளது. மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஏற்றது போல தான் செய்து கொண்டிருக்கின்றது.

மத்திய அரசு தான் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே துறை, நீதிமன்றம், கம்யூனிகேஷன் நெட்வொர்க் என அனைத்திற்கும் செலவு செய்கிறது, மத்திய அரசாங்கம் எல்லா மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக அதிகப்படியான செலவுகளை செய்து கொண்டிருக்கின்றது. பிரதமர் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றார். இதில் தமிழக பாஜக என்பது தனி அல்ல, அகில இந்திய பாஜகவின் ஒரு அங்கம். மூன்று லட்சம் கோடி ரூபாய் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த திட்டங்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும். கருணாநிதி அவர்களின் படம் போட்டு ரேஷன் கடையில் பொருட்கள் கொடுக்கக் கூடாது. அதை மாற்றிக் கொள்வார்கள் என்று தான் நினைக்கிறேன், இல்லையென்றால் மாற்ற வைப்போம்.

நான் விஜயை விமர்சித்தேன் என்று சொல்வது பொய். அது 100% பொய்.நான் விஜயை விமர்சிக்கவில்லை. அவர் அவரின் மெர்சல் படத்தில் சொன்ன பொய்யை தான் விமர்சித்தேன். அந்த படத்தில் சொல்லப்பட்ட ஒரு பொய்யை கதைக்காக சொன்ன விஷயத்தை நாங்கள் பஞ்சர் செய்துள்ளோம், அவ்வளவுதான். விஜய் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்று சொன்னவுடனேயே வாங்க என்று சொல்லிவிட்டேன். 18 வயது நிரம்பிய எவருக்கும் மக்கள் பணியாற்ற உரிமை உள்ளது. கோவிலுக்கு போய் இருக்கிறார். அதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story