சத்தி அருகே கடம்பூரில் வீட்டில் பதுக்கிய நாட்டுத் துப்பாக்கி: ஒருவர் கைது

சத்தி அருகே கடம்பூரில் வீட்டில் பதுக்கிய நாட்டுத் துப்பாக்கி: ஒருவர் கைது
வீட்டில் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த மணியை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Erode Today News, Erode Live Updates, Erode News - சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரை அருகே உள்ள நகலூர் கிராமத்தில் ஒருவர் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், போலீசார் கடம்பூர் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

உடனே வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 39) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததும், தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மணியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மணியை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story