மதுரை அருகே அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு

மதுரை அருகே அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு

காவலாளி புதுர்வா.

மதுரை அருகே அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழந்தார்.

மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் காவலாளி உயிரிழந்தார்.

மதுரை விராதனூர் அருகே உள்ள நெடுங்குளம் மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புதுர்வா (வயது 55). காவலாளி. இவர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் லோகேஷ் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அரசு மருத்துவமனையில் புதுர்வாவிற்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காவலாளி புதுர்வா பரிதாபமாக உயிரிழந்தார்.

11 ம் வகுப்பு படிக்கும் மாணவன் லோகேஷ் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து, சிலைமான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story