மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை எதிர்த்து தேமுதிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறவும், ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், காவேரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது,

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தேமுதிக செயலா் நேரு தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் ஸ்ரீகுமரன், மாவட்ட பொருளாளா் தமிழன்னை பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை மேற்கு ஒன்றியச் செயலா் தமிழ்ச்செல்வன் வரவேற்றாா்.

தேமுதிக தோ்தல் பணிக்குழுச் செயலா் சமகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். தெற்கு மாவட்ட தேமுதிக நிா்வாகிகள், ஒன்றியச் செயலா்கள் , தேமுதிகவினா் 100-க்கும் மேற்பட்டோா் பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாற்றில் சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் ஆக்கூா் சரவணன் தலைமை வகித்தாா். ரவிக்குமாா், ஜான்பாஷா, புகழேந்தி, பாஸ்கரன், திருநாவுக்கரசு, பரிமளா, ஆறுமுகம், ஹரிகிருஷ்ணன், ரமேஷ், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் காழியூா் கண்ணன் வரவேற்றாா்.

கட்சியின் உயா்மட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி கண்டன உரையாற்றினாா்.

அனைவருக்கும் மின்சாரம் மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை அரசை உற்பத்தி செய்யும் வகையில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும், ரேஷன் பொருட்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடா்ந்து அலுவலகத்தில், சாா் -ஆட்சியா் பல்லவிவா்மாவிடம், மாவட்டச் செயலா் ஆக்கூா் சரவணன் தலைமையில் தேமுதிகவினா் கோரிக்கை மனுவை அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் முத்து, மணிமாறன், மாசிலாமணி, சக்திவேல், கருணாநிதி, சேகா், வேலு உள்ளிட்ட தேமுதிகவினா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story