சிறுபான்மையினர் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் கடனுதவி முகாம்

சிறுபான்மையினர் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் கடனுதவி முகாம்

கலெக்டர் அறிவிப்பு ( கோப்பு படம்)

சிறுபான்மையினர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி முகாமில் பங்கேற்று பயனடைய கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பயனடையலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூபாய் 1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூபாய் 98,000 இக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 8,00,000 இக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-இன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூபாய் 20,00,000, திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூபாய் 30,00,000 கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூபாய் 10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூபாய் 1,00,000 ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2 -இன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம் பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூபாய் 1,50,000 கடன் வழங்கப்படுகிறது.

மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை அல்லது முதுகலை தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூபாய் 2 0 , 0 0 , 0 0 0 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2 -இன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம் மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூபாய் 30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story